பக்கங்கள்

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை நடத்தும் எம்.ஜி.ஆர். விழா!

பிரான்ஸ் - 16-Sep-2011 பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை நடத்தும் ‘எம்.ஜி.ஆர். விழா 2011’ பிரான்ஸ் நாட்டிலுள்ள எம்.ஜி.ஆர். பேரவை என்ற அமைப்பு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் எம்.ஜி.ஆருக்காக விழா எழுக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து முக்கிய பிரமுகர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து,பல்வேறு அம்சங்களுடன் நிகழ்ச்சிகளை அமைத்து ஒரு நாள் முழுவதும் விழா நடத்துகிறார்கள். இலக்கிய சொற்பொழிவு, இசை, நாட்டியம் என்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் உண்டு. எம்.ஜி.ஆர்., பற்றிய சிறப்பு தபால் தலையும் ஆண்டு தோறும் வெளியிடுகிறார்கள். இந்த ஆண்டு வரும் 17 செப்டெம்பர்,2011- சனிக்கிழமையன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். விழாவில் திரைப்பட நடிகர் மயில்சாமி, 'இதயக்கனி' ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். 'இதயக்கனி' விஜயனின் எம்.ஜி.ஆர். புகைப்படக் கண்காட்சியும் முக்கிய அம்சமாக இடம் பெறுகிறது. இந்த விழாவில் இந்திய தூதரக அதிகாரிகள் திருமதி.காயத்ரி கிஷோர்குமார், எம்.எஸ்.கன்யால், பிரான்ஸ் தமிழ் சங்கத் தலைவர் பா.தசரதன், பிரான்ஸிலுள்ள பாரீஸ் நகர செயின்ட் தெனிஸ் மேயர் திதியே பயார்டு, மற்றும் பிரான்சுவா கிளாத், திருமதி. புளோரன்ஸ் ஹேய், திருமதி. ஜாக்குலின் பவுலா ஆகிய துணை மேயர்களும் பங்கேற்கிறார்கள். அழைப்பிதழ்: www.facebook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக